15 நவ 2009, ஞாயிற்றுக்கிழமை
"பத்திரிக்கையாளர்கள் உண்மையை எழுத வேண்டும். மிகைப் படுத்தக்கூடாது..." என்று சமீபத்தில் தமிழக முதல்வர் கருணாநிதி வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.
அவர் அதை குறிப்பிட்ட பத்திரிக்கையாளர்களுக்கு, சில குறிப்பிட்ட செய்திகளை அவர்கள் வெளியிட்டதற்காக அப்படி கூறியிருக்கிறார் என்று எடுத்துக்கொண்டாலும் சமீப காலமாக பத்திரிக்கைகள் மட்டும் அல்ல, அனைத்து ஊடகங்களும் மிகைப்படித்துதலை ஒரு கட்டாய சடங்காகவே கடைப்பிடித்து வருவதாகத்தான் தோன்றுகிறது.
அரசியல் செய்திகள் எனும் போது ஒவ்வொரு பத்திரிக்கை / தொலைக்காட்சி தாம் சார்ந்திருக்கும் அல்லது ஆதரிக்கும் கட்சிக்கு ஆதாயம் வேண்டும் என்ற ஒரே நோக்கில் செய்திகளை திரித்தும் மிகைப்படுத்தியும் வெளியிடுவது போன்றே தெரிகிறது.
அரசியல் செய்திகள் என்று இல்லை, சினிமா, வணிக செய்திகளும் இவ்வாறே இருக்கின்றன.
இந்த சூழலில், இந்த செய்திகளை பார்க்கின்ற, படிக்கின்ற பொது மக்கள், அந்த விசயங்களை கிரகிப்பதுடன், அதன் நம்பகத்தன்மையையும் அலசி ஒரு முடிவுக்கு வரவேண்டி உள்ளது. எந்த செய்தியானாலும் எடுத்த எடுப்பில் அதை அப்படியே நம்பிவிட முடியவில்லை.
சில நேரங்களில் உண்மைக்கு புறம்பான செய்தியைவிட மிகைப்படுத்திய செய்தி அதிக எதிர்வினையை ஏற்படுத்திவிடுகிறது.
செய்திகளை வடிகட்டி ஒழுங்குபடுத்தி வெளியிட ஒரு அமைப்பை - official structure / hierarchy - கொண்டுள்ள பத்திரிக்கை, தொலைக்காட்சி இவற்றில் இந்த நிலை என்றால், யார் வேண்டுமானாலும் எதை வேண்டுமானாலும் எழுத முடிகிற ஊடகமான இண்டெர்நெட்டில்.....
உண்மை, பொய், மிகை என்ற வகைகளோடு இனி செய்தி என்ற ஒன்றையும் சேர்த்துக்கொள்ளவேண்டியதுதான்...
Subscribe to:
Post Comments (Atom)

The interest that people show in Reality shows is also a reason for this exaggerated news publishing in all forms. Media believes that people like such exaggerations and its a successful way of representing the facts
ReplyDelete